தையல் கலையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் வாய்ப்புகள்.


தையற்கலையின் நிலைகள் :

"சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்' என்ற வாக்கிற்கு இனங்க தையல் கலையைப் பழகப் பழகத் தான் தையல் கலையின் நுனுக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வளரிளம் பருவப் பெண்ணுக்கு ஆர்வம் பிறக்கும்.
அத்தகைய ஆர்வத்திலிருந்து தையல் கலையைப் பற்றிய பல்வேறு நுனுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேடுதல் வளரிளம் பருவப் பெண்ணுக்கு ஆர்ம்பம் ஆகும்.
அத்தகைய தையல் கலை பற்றிய தேடுதலின் விளைவாக, ஒரு வளரிளம் பருவப் பெண் தையல் பயிற்சி என்ற நிலையைத் தாண்டி, தையல் கலை நிபுணராக மாற வேண்டும் என்று செயலில் இறங் குகிறார்.
தையல் பழகும் போது வளரிளம் பருவம் பெண் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது , யாருக்கு துணியைத் தைக்கப் போகிறோம் என்பது. அதாவது , ஆண்களுக்காகவா அல்லது பெண்களுக்காகவா, வளர் இளம் பருவ ஆடவருக்கா அல்லது பெண்களுக்கா, அல்லது ஆண் குழந்தைகளுக்கா என்று தெரிந்து கொண்டு , புரிந்து கொண்ட பின் அவரவரின் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையில் தைக்க ஆரம்பிக்க வேண்டும்.


தையல்க் கலையில் சுய வேலை வாய்ப்பு :

கலை ஆர்வமுள்ள ஒவ்வொரு வளரினம் பருவப் பெண்ணும் தையல் கலையைக் கற்று , அதில் தேர்ந்து சுயமாக வேலை செய்து, குடும்பப் பொருளாதாரத்தைப் பெருக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டு துவக்கத்திலிரூந்து இந்நாள் வரைக்கும் நாளுக்குநாள் இந்தத் தையல் தொழில் நாளொரு வண்ணம், பொழுதொரு மேனி என்ற வகையில் வளமான தொழிலாக மாறி உள்ளது.
இந்தத் தையல் தொழிலில் சுய வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் இந்தத் தையல் துறை மேலும் வேகமாக வளர்ச்சி பெற அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பகுதி நேர தையல் கலைஞர்

முதலில், சுய தொழிலாக செய்ய குடும்ப சூழ்நிலை அமையாத பெண்கள், தையல் கலையை முழு நேரத் தொழிலாகக் கொண்டு வருவாய் ஈட்டிவரும் தையல் துறைக் கலைஞர்களுடன் இணைந்து, பகுதி நேர தையல் கலைஞராக,ஜாப் ஆர்டர் எடுத்து செய்து, தையல் கலை வளர்ச்சியில் உள்ள தொழில் வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொண்டு குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

காலாட்டியே பிளைத்துக் கொள்ளலாம் 

காஞ்சிபுரத்திற்குப் போனால், காலாட்டி பிழைத்துக்கொள்ளலாம் என்று கூறுவார்கள், அதாவது, பட்டுத் தறியில், வேலைக்குச் சென்று, காலை ஆட்டினால் பணம் சம்பாதிக்கலாம் என்பார்கள். இன்று அத்தகைய சங்கடங்கள் வளரிளம் பருவப் பெண்களான உங்களுக்கு வேண்டாம். உங்கள் ஊரிலேயே, உங்கள் வீட்டிலேயே உங்கள் காலை உங்கள் இஷ்டம் போல், தினம் தினம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தையல் மெஷினைக்கொண்டு மதி நுட்பத்துடன் ஆட்டினால், தையல் மெஷின் அருகில் அமர்ந்து மன ஒருமைப் பாட்டோடு காலால் தினம் தினம் மிதித்தால், பணம் வந்து உங்கள் வீட்டில் கொட்டும், இது கதை இல்லை. நிஜம் செய்துதான் பாருங்களேன்!.

ஒரு கல்லில் மூன்று மாங்காய் :

குடும்பத் தலைவனின் வருவாய் குடும்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவில்லை அல்லது குடும்ப வருவாய், குடும்ப செலவுக்குப் போதவில்லை என்ற நிலையில், குடும்பத் தலைவி என்ற முறையில், ஒரு பெண் தையல் கலையில் ஈடுபட்டு வீட்டில் இருந்த படியே மற்ற குடும்பப் பொறுப்புகளைக் கவனித்தபடி, அவரவர் தெரு மற்றும் அவரவர் நகரில் உள்ளவர்களின் துணிகளை வங்கித் தைத்து அவரவர் கை வண்ணத்தை வெளிப்படுத்தலாம்.

இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் உள்ளது . ஒன்று குடும்ப தலைவியின் நேரம் பயனுள்ள வழியில் , ஆக்க வழியில் செலவு ஆகிறது. இரண்டவது குடும்ப தலைவியின் உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம் அதிகரிக்கிறது. மூன்றாவதாக, குடும்பத் தலைவியின் சிறிய தையல் முயற்சியால், குடும்ப வருவாயும் கணிசமான அளவு அதிகமாகிறது






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தையல்கலை ஓர் அறிமுகம்.

தையல் இயந்திர பாகங்கள்

தையல் கலைப் பொருட்கள்